ஒரத்தநாடு - Orathanadu

பட்டுக்கோட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பட்டுக்கோட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடிப்பழக்கம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குமார் விஷத்தை குடித்தார். இதனை பார்த்த உற வினர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து செல்வராணி பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా