ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சாவூரில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1 க்கு முன் பணியில் சேர்ந்து பின்னர் பணி நிரந்தரம் பெற்ற அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும்.  குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் வ. ஆறுமுகம், சோனை. கருப்பையா, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். இராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా