பட்டுக்கோட்டை - Pattukottai

திருவோணம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

திருவோணம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

திருவோணம் அருகே கீழ ஊரணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53) இவருக்கு அங்கு சொந்த வீடு உள்ளது. மருந்து கடையும் நடத்தி வருகிறார். தற்போது தஞ்சையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்நிலையில் கடை ஊழியர் கீழ ஊரணிபுரத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கு மின் விளக்குகளை அணைப்பதற்காக சென்றார். அப்போது வீடு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தார். செல்வகுமார் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 17 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டின் மற்ற அறைகளிலும் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பரிசோதனை செய்தனர். தஞ்சையில் இருந்து மோப்பநாய் வரவழைத்து துப்புதுலக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரணிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் திருட்டு நடந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர் திருட்டுகளால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా