திருவையாறு - Thiruvaiyaru

திருக்காட்டுப்பள்ளி: 46 மது பாட்டில்கள் பறிமுதல்.. பெண் உள்பட 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி: 46 மது பாட்டில்கள் பறிமுதல்.. பெண் உள்பட 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் 46 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் நேற்று(அக்.9) கைது செய்தனர். வரகூரில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீஜா மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். வரகூர் பிள்ளையார் கோயில் தெரு அருகே 2 பேர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அரசு அனுமதியின்றி 46 மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்துச் செல்வதும், அவர்கள் வரகூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராசு மகன் ஆகாஷ் (18) மற்றும் குளத்துத் தெருவைச் சேர்ந்தராமச்சந்திரன் மகள் சரண்யா (30) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 46 மது பாட்டில்களை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து ஆகாஷ் மற்றும் சரண்யாவை போலீஸார் கைது செய்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా