பேராவூரணி - Peravurani

பேராவூரணியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

பேராவூரணியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

பேராவூரணியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சேகர் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜவஹர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி நகரக் கழகச் செயலாளர் நீலகண்டன் அனைவரையும் வரவேற்றார்.  முன்னதாக சேது சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சேது சாலை முக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా