பேராவூரணி - Peravurani

உடனடி நடவடிக்கை எடுத்தாரா...? தஞ்சாவூர் எம். பி

ரேஷன்கடை முன்பு நின்று ரேஷன் கடையை சரிவர திறந்து பொருட்கள் வழங்க கோரிக்கை வைத்த பெண்கள் - அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க சொன்ன தஞ்சை எம். பி. முரசொலி - பேராவூரணி அருகே நன்றி சொல்லப்போன இடத்தில் நடந்த சம்பவம். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு தெருக்களிலும் நடந்து சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம். பி. முரசொலி அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாவடுகுறிச்சி கிராமத்திற்கு சென்ற எம். பி. முரசொலியிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பகுதியில் உள்ள ரேஷன்கடை முறையாக திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும் பொருட்கள் சரிவர கொடுப்பதில்லை என்று தெரிவித்தனர். உடனே எம். பி. முரசொலி, தன்னுடைய அலைபேசியிலிருந்து சம்மந்தப்பட்ட ரேஷன்கடை உயரதிகாரியிடம் பேசினார். உடனே சம்மந்தப்பட்ட அலுவலரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியுடன் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా