வேப்பனஹள்ளி - Veppanahalli

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தன்பால் (41) இவர் மருந்து கடை வைத்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மன ஊளைச்சலில் இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசூர் பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதிக்கு தனபால் சென்றார். அங்கு அவர் 2 நாட்களாக, அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்துள்ளார். நேற்று(செப்.11) அவரது அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது. அங்கு தனபால் உயிரிழந்து கிடந்தார். இதையெடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி