போச்சம்பள்ளி அருகே தகாத உறவில் 2 பேர் தற்கொலை.

61பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி மற்றும் ஊத்தங்கரை வண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் திலகவதிக்கு ஹரிஷ் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த திலகவதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த ஹரிஷசும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி