கிருஷ்ணகிரி மவட்டம், குருபரப்பள்ளி, ராயக்கோட்டை போலீசார் அந்தந்த பகுதிகளில் சம்பவம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக எண்ணெகொள்புதூர் சின்னசாமி (42) ராயக்கோட்டை அடுத்த கருக்கம்பட்டி சசிகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யபட்டது.