1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார் - சக்கரபாணி

64பார்த்தது
1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார் - சக்கரபாணி
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில் 1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார் செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாநகரில் இன்று (செப்.12) அமுதம் நியாய விலைக் கடையை திறந்த வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். விரைவில் கொளத்தூர், காஞ்சிபுரத்தில் அமுதம் அங்கன்வாடியை திறந்து வைக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி