அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி.

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி சார்பாக, போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பள்ளியிலிருந்து பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணி நடைபெற்றது. இதில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள் பலர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி