கல்லூரி மாணவியை திருமணம் செய்தவர் மீது வழக்கு.

69பார்த்தது
கல்லூரி மாணவியை திருமணம் செய்தவர் மீது வழக்கு.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் பி. எஸ். சி. முதலாம் அண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இந்த மாணவியை பெரிய மணவாரனப்பள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் (25) என்பவர் சம்பவம் அன்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் முனியம்மா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :