போச்சம்பள்ளி மருத்துவமனையில் உலக மருத்துவ தினம் கொண்டாட்டம்.

71பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தலைமை மருத்துவ அலுவலர் நாராயணசாமி தலைமை வகித்தார். மருத்துவர்கள் அனிதா, சஞ்சீவி, சித்தா மருத்துவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவ நாராயணசாமிக்குசால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.