அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு

2627பார்த்தது
அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று தீர்ப்பை வழங்குகிறது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.