வணக்கம் பள்ளி அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை.

1922பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராம்குமார் (25) இவர் சூளகிரியை அடுத்த ஜோகிரிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் சுஜாதாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ராம்குமார் வீட்டில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில் ராம்குமாரை மர்ம நபர் கழுத்தை நெறித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து என் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி