
கிருஷ்ணகிரி பட்டுப்புழுக்கள் வளர்ப்பு குறித்த விவசாயிகள் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மணவாரனப்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு மல்பெரியில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மைஉதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து பட்டுப்புழு வளர்ப்பு முறை, மல்பெரியில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் ஜீவாமிர்தம், பசுந்தாள் உரம் தயாரித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு முறை பற்றி எடுத்துக்கூறினார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விவரம் மற்றும் இடுபொருள் வழங்கப்பட்டது. அட்மா