கிருஷ்ணகிரி: கே. ஆர். பி. அணையில் செத்து மிதக்கும் மீன்கள்.
கிருஷ்ணகிரி கே. ஆர். பி அணையில் கொத்து கொத்தாக டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் மழை தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதக்கிறது என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும் செத்தமீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.