வேப்பனஹள்ளி - Veppanahalli

கிருஷ்ணகிரி: ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒண்டியூர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விஸ்வா (10) மேல் கரடிகுறி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ஆம் தேதி அன்று கரடிகுறி ஏரி அருகே நடந்து சென்றபோது சிறுவன் தவறி உள்ளே விழுந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அங்கு ஓடி சென்று காப்பாற்ற முயற்சி செய்தும் சிறுவன் விஸ்வா உயிரிழந்தான். தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி