மாத்தூர்: ஏரியில் மிதந்த கூலித்தொழிலாளியின் சடலம்

1047பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூரை சேர்ந்த மணி மகன் அறிவழகன் (35) இவர் கூலித்தொழிலாளி. கடந்த சிலநாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் மத்தூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதப்பதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை மற்றும் மத்தூர் போலீசார் இணைந்து ஏரியின் நடுவில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் காணாமல் போன அறிவழகனின் உடல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிவழகனின் மனைவி தேவி (29) கொடுத்த புரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி