வேப்பனஹள்ளி - Veppanahalli

விஷம் குடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விஷம் குடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே உள்ள சிகரமாக்கனப்பள்ளி அடுத்த உண்டிகைநத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (40) கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மரத்தை வெட்டிய போது சின்னராஜ் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில், கடந்த செப்-18ம் தேதி அன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி