விஷம் குடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே உள்ள சிகரமாக்கனப்பள்ளி அடுத்த உண்டிகைநத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (40) கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மரத்தை வெட்டிய போது சின்னராஜ் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில், கடந்த செப்-18ம் தேதி அன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.