ஆலந்தூர் - Alandur

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட் அருகே மேட்டுத்தெருவில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடுகிறார். அதே காய்கறி மார்க்கெட் பூசனிக்காய் வியாபாரியிடம் பூசனிக்காய் வாங்குவது போல் பாவனை காட்டி கல்லாவில் இருந்த 64ஆயிரம் ரூபாய் திருடி சென்றது என குற்றச்சம்பவங்களில்ஈடுபட்டு வந்துள்ளார். இவர் செய்த குற்றச்சம்பவங் களுக்குமான சிசிடிவி காட்சிகளை செங்கல்பட்டு போலீசார் சேகரித்து வைத்திருந்தனர். இந்த வாலிபர் இந்த குற்றச்சம்பவங் களையும் தாண்டி செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் 10முதல் 13வயது வரை உள்ள சிறுவர்களை குறிவைத்து அவர்களை கத்தியை காட்டி மிரட்டி ஒவ்வொரு முறையும் ஒரு சிறுவன் என திட்டமிட்டு சிறுவனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதேபோல் நான்கு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதில் காலில் பலத்த காயமடைந்த அமீர் அப்துல் காதரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டு அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி அவரை மீண்டும் வருகிற 29ஆம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా