சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள், செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் வாசலில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது கையில் வைத்திருந்த குழந்தையின் செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.