நந்தி பகவானுக்கு மலர்கள், காய்கறிகளால் அலங்காரம்

80பார்த்தது
தூத்துக்குடி: மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கும், காய்கறி, பழங்கள்,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டனர். சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், விபூதி, பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி