வாகனங்களிலிருந்து 1175 லிட்டர் டீசல் திருட்டு
அரூர் |

வாகனங்களிலிருந்து 1175 லிட்டர் டீசல் திருட்டு

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரப்பட்டி சாமல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் சங்க தலைவராக உள்ளார். மேலும் அந்த பகுதியில் ஆட்டோ டீசல் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இந்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த லாரி, தனியார் பள்ளி பேருந்துகள் என மொத்தம் 7 வாகனங்களில் மொத்தம் நேற்றுமுன்தினம் (செப்.,29) இரவு 1175 லிட்டர் டீசலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி வெங்கடேசன் நேற்று செப்டம்பர் 30 அளித்த புகாரின் பேரில் அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு