சூலூர் - Sulur

தொழிலாளியிடம் ரூ. 38 ஆயிரம் திருட்டு

தொழிலாளியிடம் ரூ. 38 ஆயிரம் திருட்டு

மத்திய பிரதேசம் கோதாவரி நகரை சேர்ந்தவர் மனோஜ் (42). இவர் உறவினர் இறப்பிற்கு துக்கம் விசாரிக்க நேற்று(செப்.10) கோவை வந்திருந்தார். அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே பஸ்சில் இருந்து இறங்கிய இவர் சிறுநீர் கழிப்பதற்காக அவசரமாக அருகில் இருந்த மறைவான பகுதிக்கு சென்றார். இவர் தனது கையில் வைத்திருந்த பேக்கை பக்கத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் திடீரென அந்த பேக்கில் இருந்த ரூ. 38 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மனோஜ் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా