சூலூர் - Sulur

மகன் இறந்த துக்கம்: தாய் தற்கொலை

மகன் இறந்த துக்கம்: தாய் தற்கொலை

கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி மனைவி மெர்சி (43). இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது ஒரே மகன் இறந்து விட்டார். இதனால் மகன் இறந்த துக்கம் தாளாமல் மெர்சி அடிக்கடி அக்கம்பக்கத்தினரிடம் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், தனது மகனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். மனவேதனையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மெர்சி நேற்று (செப்.,19) தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மெர்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా