தங்கும் விடுதியில் செல்போன் திருட்டு -சிசிடிவி காட்சி உள்ளே!

50பார்த்தது
கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட் மென்ஸ் என்னும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் தங்கி அருகில் உள்ள TNPSC பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியின் அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது பின்பு எழுந்து பார்க்கும் போது தன்னுடைய விலைமதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று திருடி விட்டுச் செல்லும் காட்சி பதிவாக இருந்தது. இதை வைத்து பிரவீன்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி