சூலூர் - Sulur

மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சாவு

மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சாவு

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஒரு மின் கம்பத்தில் கடந்த 2ம் தேதி வாலிபர் ஒருவர் ஏறி கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த வாலிபரை கம்பத்தில் இருந்து இறங்கும் படி தெரிவித்தார். ஆனால் அந்த வாலிபர் வேகமாக ஏறி அங்கிருந்த மின்சார வயரை தொட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் கணேஷ்குமார் (வயது 52) என்பவர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 27 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பன போன்ற விவரம் கிடைக்க வில்லை. இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా