சூலூர் - Sulur

நான்கு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது!

நான்கு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா (30) என்பவர் அவருடைய காரை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். ஆனால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டனர். இது சம்பந்தமாக சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் சோமனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (40), கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (37) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தான் நான்கு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా