வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது!

54பார்த்தது
வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது!
கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதன் பேரில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொண்டும், பழங்குற்றவாளிகளை தணிக்கை செய்து விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் (36), அபுதாகிர்(36), ஹக்கீம் (40)
ஆகியோர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சூலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளின் சொத்துக்களான 19 சவரன் தங்க நகைகள், திருப்பூர் மங்கலம் பகுதியில் திருடிய இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து நேற்று (செப் 7) மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி