காவல் நிலையத்தில் இந்து அமைப்புகளுடன் விநாயகர். ச ஆலோசனை!

59பார்த்தது
கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் விநாயகர் சிலையை அங்கு கரைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, சிறிய குளத்தில் சிலையை கரைப்பதற்கு ஏற்ற மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி