சூலூர் - Sulur

கோவை: தாலிக்கு தங்கம் மீண்டும் செயல்படுத்தப்படும் - வேலுமணி

கோவை மாவட்டம் சூலூரில் நேற்று நடைபெற்ற மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மகளிருக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கியது, மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கியது என பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தினார். மகளிருக்கான கட்சியாக அதிமுகவை உருவாக்கியவர் புரட்சித் தலைவி அம்மா. தற்போது திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள தாலிக்கு தங்கம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, மகளிருக்கான இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று எஸ். பி. வேலுமணி உறுதியளித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் மகளிருக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் திமுக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும், பெண்களின் முன்னேற்றத்தில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా