திமுக சார்பாக பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக கோவை வரதராஜபுரம் பகுதியிலுள்ள இ. எஸ். ஐ. மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மாநகர் மாவட்ட பொருளாளர் S. M. P. முருகன், கழக தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சி முத்து, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு. ரா. செல்வராஜ், வழக்கறிஞர் மாநில இணைச் செயலாளர்கள் கே. எம். தண்டபாணி, பி. ஆர். அருள்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் புதூர் மணிகண்டன், தங்கம் சந்திரசேகர், குப்புசாமிசரஸ்வதி, புஷ்பராஜ், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ். எம். சாமி, மு. சிவா, கழகத் தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.