சூலூர் - Sulur

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

கோவை அடுத்த துடியலூர் கவுண்டர் மில் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காவியா(23). குடிப்பழக்கம் உடைய கோபிநாத் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம்(செப்.7) குடிபோதையில் வீட்டுக்கு வந்த கோபிநாத்தை, காவியா கண்டித்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோபிநாத் தகாத வார்த்தைகளால் பேசி காவியாவை அடித்து உதைத்தார். இது குறித்து காவியா துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా