குடிப்பழக்கத்தோடு பள்ளி வாகனங்களை இயக்கக் கூடாது!

55பார்த்தது
குடிப்பழக்கத்தோடு பள்ளி வாகனங்களை இயக்கக் கூடாது!
கோயம்புத்தூர் சஹோதய பள்ளிகள் அமைப்பு மற்றும் உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பு சார்பில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பட்டனம் பகுதியில் அமைந்துள்ள எஸ். எஸ். வி. எம். வேர்ல்டு ஸ்கூலில் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் பங்கேற்றார். போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் பேசுகையில், "365 நாட்களில் கிட்டத்தட்ட 250 நாட்கள் குழந்தைகளுடன் பயணிக்கும் ஓட்டுநர்கள், குடிப்பழக்கத்துடன் பொது வாகனங்களை, குறிப்பாக பள்ளி வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி