
வடசேரி: 25 மது பாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாடான்குளம் அருகே நேற்று (அக்.,3) மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் வடசேரி சப் - இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது திருவிதாங்கோட்டை சேர்ந்த ராஜ சுதர்சன் என்பவர் மது பாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.