நாகர்கோவில் - Nagarkovil

குமரியில் கார் மீது டெம்போ மோதல்; 4 பேர் காயம்.

குமரியில் கார் மீது டெம்போ மோதல்; 4 பேர் காயம்.

குமரி மாவட்டம் நட்டாலம் அருகே இடவிளாகம் துண்டத்து விளையை சேர்ந்தவர் பிளஸ்ஸோ தாமஸ் (வயது 32). இவர் தனது மனைவி மேரி பபிதா (31) குழந்தைகள் இவான் ஜோசுவா (4), ஜரா எம்லின் (1/2) ஆகியோருடன் காரில் ஆரல்வாய்மொழியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் திரும்பினார். பெருமாள்புரம் கன்னி விநாயகர்கோவில் முன்பு சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த டெம்போ, காரின் மீது மோதியது. இதில் காரில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக 4 பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் டெம்போ டிரைவரான பணகுடியை சேர்ந்த விக்டர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా