அதிக பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி சிறைபிடிப்பு
கன்னியாகுமாரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் செல்வதற்கு நேர கட்டுப்படு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிக பாரம் ஏற்றி வந்ததாக மூன்று டாரஸ் லாரிகளை நேசமணிநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.