கர்நாடகா: பெங்களூருவில் மதராசா பள்ளி மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மதராசா பள்ளி என்பது இஸ்லாமிய நடைமுறை பள்ளி, இதில் பெண் பிள்ளைகள் மட்டும் பயின்று வருகின்றனர். மாணவிகள் ஏதேனும் தவறு செய்தால், நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், பள்ளி மாணவியை, தாளாளர் ஒருவர் கொடூரமாக தாக்கி, உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.