இளைஞர் தீக்குளித்த விவகாரம் - அண்ணாமலை கண்டனம்

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்ற முயன்றதால் மனம் உடைந்த இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்தார். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்களாக இடிக்கப்படுகின்றன” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி