மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் வைகல் கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததால் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் நான்கு குடும்பத்தினரை ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கின்றனர். இதனிடையே அவர்களின் கூரை வீட்டை சிலர் தீயிட்டு எரித்ததால் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.