பூம்புகார் - Poombhukar

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் வைகல் கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததால் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் நான்கு குடும்பத்தினரை ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கின்றனர். இதனிடையே அவர்களின் கூரை வீட்டை சிலர் தீயிட்டு எரித்ததால் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை
Sep 12, 2024, 11:09 IST/

ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை

Sep 12, 2024, 11:09 IST
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 500 * கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் * ஊதிய விவரம்: ரூ.14,000 * தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.