புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வாணாதி ராஜபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ள முகமது ரிஸ்வான் என்பவரது கடையில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கடையில் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி