நூதன மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தவர்கள் கைது

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக நூதன முறையில் பணமோசடியில் இரண்டு நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதாக நூதன மோசடி செய்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (42), அன்னப்பா (44) ஆகிய இருவரையும் மணல்மேடு போலீசார் நேற்று கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி