அவதூறாக பேசிய நபருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் பெண் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ள விக்னேஸ்வரன் என்ற இளைஞர் மயிலாடுதுறை காவல்துறையினரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து முகநூலில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து மயிலாடுதுறை போலீசார் நேற்று 5 பிரிவுகளின் கீழ் விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.