வேப்பனஹள்ளி - Veppanahalli

மாமியாரை இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகன்.. பரபரப்பு

மாமியாரை இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகன்.. பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36) காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ஹர்ஷிதா (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்டுகிறது. இதன் காரணமாக ஹர்ஷிதா கோபித்துக்கொண்டு சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் (செப்-13) மாலை, சூளகிரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டபோது வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி ஹர்ஷிதா, மாமனார் பரசுராமன், மாமியார் தாட்சாயணி உள்ளிட்ட 4 பேரை இரும்புக்கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஹர்ஷிதா, கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி