படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு

56பார்த்தது
படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர். கோமா நகரிலிருந்து மினோவா நகருக்கு செல்லும் சாலை போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்கள் படகு மூலம் சென்றுவருகின்றனர். இந்நிலையில், 150 பேர் செல்ல வேண்டிய படகில் 278 பேர் ஏற்றப்பட்டதால், படகு கவிழ்ந்துவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதுவரை 40 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி