மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் (வீடியோ)

80பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத் வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் அபிஷேக் படேல் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று, ஆத்திரத்தில் வரும் அபிஷேக் மாணவர்கள் அனைவரின் முன் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் பலமுறை அறைந்து ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் அபிஷேக் படேலை கைது செய்துள்ளனர்.

நன்றி; OUR AHMEDABAD

தொடர்புடைய செய்தி