திருப்பதி லட்டு தரம் மேம்பட்டுள்ளது: சந்திரபாபு நாயுடு

55பார்த்தது
திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து திருப்தி தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதியில் இன்று (அக்., 05) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை சரிபார்க்க ஆய்வகங்களை அமைப்பதுடன், தேவைப்பட்டால், கோயில் நிர்வாகம் ஐஐடியையும் அணுகலாம். லட்டு தரமாக இருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்' என்றார்.

தொடர்புடைய செய்தி