ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம். வேப்பூர் ஊராட்சி VP பேலஸ் வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியினை உறுதி செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று (செப்.9) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ. எல். ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிச்சந்திரன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా