அரக்கோணத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கண்டெடுப்பு

73பார்த்தது
அரக்கோணத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கண்டெடுப்பு
அரக்கோணம் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் நடை மேம்பாலத்தின் மீது நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்ட பயணிகள் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரனை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி