நின்றிருந்த லாரி மீது மோதிய கண்டெய்னர் லாரி!

79பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அம்மணதாங்கள் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் சிக்கிக்கொண்டிருந்த பள்ளிகொண்டா அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கணேசன் வயது (50) என்பவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு வாகனத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

மேலும் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்து பலத்த படுகாயமடைந்த ஓட்டுனரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி