மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது!

78பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டி. எஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் சித்தூர்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் தாடிஅருணாசலம் தெருவை சேர்ந்த தரணி (34) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் பல்வேறு பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தரணியை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி