அரக்கோணத்தில் பேருந்து கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

75பார்த்தது
அரக்கோணத்தில் பேருந்து கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (வயது 42). இவரது மகள் காவியா (19). இவருக்கு புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களது கார் அரக்கோணம் நகருக்குள் காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் சுகுணா (42), கிஷோர் (14), காவியா (19), நட ராஜன் (58) மற்றும் ஸ்ரீராம் (27) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து நடராஜ், சுகுனா மற்றும் காவியா ஆகிய 3 பேரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி