போலி ஆவணங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றதாக புகார்!

85பார்த்தது
வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி ஊராட்சிக்குட்பட்ட சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள சோளிங்கர் வாலாஜா செல்லும் நெடுஞ்சாலை ஒட்டி உள்ள கிராமத்துக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்வதாக அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அந்த கிராம பொதுமக்கள் ஆக்கிரமிப்பை உடனடியாக உடனடியாக அகற்ற வேண்டுமென தெரிவித்து சோளிங்கர் -திருத்தணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " சுடுகாடு மற்றும் கோவில் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ளது ஆகவே ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்".

தொடர்புடைய செய்தி